புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

நாட்டில் சூரிய சக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கைகள்

Posted On: 20 DEC 2022 3:40PM by PIB Chennai

நாட்டில் சூரிய சக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று  எழுத்து மூலம் அளித்த பதிலில், கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி, தகடுகளை அமைத்து மின்சார உற்பத்தி செய்வதற்கு உரிய பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்ததுடன், அவற்றை பட்டியலிட்டுள்ளார்.  

சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்திக்கான சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதையும் அது தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு பல்வேறு ஊடகங்கள் மூலம் பொது மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

**************

(Release ID: 1885076)

AP/PKV/KPG/KRS



(Release ID: 1885174) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Gujarati , Telugu