உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃப்பிஐ-ன் முன்னேற்றத்திற்கான ஆக்க முயற்சி

Posted On: 20 DEC 2022 1:59PM by PIB Chennai

நடப்பு 2021-22 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ரூ.10,900 கோடி செலவில், மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் உணவுப் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், சர்வதேச உணவு உற்பத்தி நிறுவனங்களை உருவாக்கவும் உதவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2015-16-ம் நிதியாண்டில் 29.67 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 2021-22- நிதியாண்டில் 46.11 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதேப் போல் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதியும், 2021-22 நிதியாண்டில் 10.4 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. முன்னதாக 2015-16 நிதியாண்டில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 4.85 பில்லியன் டாலராக இருந்தது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்தும் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

**************

AP/ES/AG/KRS


(Release ID: 1885113)
Read this release in: English , Urdu , Marathi , Telugu