உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள்

Posted On: 19 DEC 2022 2:27PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளின் நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் அம்சங்கள் பின்வருமாறு:

  • வாகன நெரிசலைத் தடுக்க கூடுதல் போக்குவரத்து நெரிசல் தடுப்புக்  காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • பயணிகள் செல்லும் நுழைவு வாயில் மற்றும் விமானத்திற்காக காத்திருக்கும் கடைசி நிமிடம் குறித்த தகவல்களை பயணிகளுக்காக பிரமாண்ட அளவில் டிஜிட்டல் (மின்னணு) திரைகள் வைக்கப்பட்டுள்ளன
  • 2 கூடுதல் நுழைவு வாயில்கள் பயணிகள் நுழைவுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மூலம் கூடுதல் வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • பயணிகளின் உடமைகளை  ஆராய்வதற்காக கூடுதல் எக்ஸ்ரே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • சிசிடிவி-க்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
  • கூட்ட நெரிசலை நிர்வகிக்க ஏதுவாக பயணிகளை எண்ணும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை  அமைச்சர் திரு வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத்  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884773

**************

AP/ES/KPG/KRS



(Release ID: 1884891) Visitor Counter : 109


Read this release in: Gujarati , English , Urdu