தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பன்னெடுங்கால பழமையான வரலாற்று, கலாச்சார, ஆன்மீக தொடர்பைப் பிரதமர் புதுப்பித்துள்ளார்: திரு அனுராக் சிங் தாக்கூர்
காசி மற்றும் சிவகாசியில் உள்ள கலாச்சாரம், சடங்குகள், பெயர்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை: திரு.அனுராக் சிங் தாக்கூர்
Posted On:
11 DEC 2022 7:35PM by PIB Chennai
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வந்த பழமையான வரலாற்று, கலாச்சார, ஆன்மீக தொடர்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார் என்று மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கமத்தின் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கிடையே பேசிய அமைச்சர், காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500 பேர் காசிக்கு வருகின்றனர் என்றார் அவர். இந்த நிகழ்வில் விளையாட்டுகளை சேர்த்து இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ விளையாட்டுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. ஒரு விளையாட்டில் தோல்வி அல்லது வெற்றி என்பது முக்கியமல்ல, இந்த நட்பு போட்டி ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள உதவும் என்று அமைச்சர் கூறினார். ஒருவருக்கு மொழி தெரியாவிட்டாலும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடியும் என்று அவர் கூறினார்.

அமிர்த காலத்தின் போது, நாம் உரிமைகளைத் தேடுவது மட்டுமல்லாமல் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கை திரு தாக்கூர் சுட்டிக்காட்டினார். வாரணாசியில் கடந்த எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இதற்கு முன் காணப்படவில்லை என்றார் அவர். இந்த வளர்ச்சி வாரணாசியில் மட்டுமல்லாமல் , இந்தியா முழுவதும் உள்ளது. காசி தமிழ் சங்கமம் பற்றி முன்பு யாரும் யோசிக்கவில்லை. காசியுடன் தொடர்புடைய தென்காசி, சிவகாசி என தமிழகத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன என்று அவர் கூறினார். இது ஆரம்பம்தான் என்று கூறிய அவர், இப்போது காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள் என்றார். இந்த சங்கமம் நடைபெறுவதற்கு பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து பணியாற்றியதை அவர் பாராட்டினார். தமிழகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
காசியுடன் தொடர்புடைய தமிழ்நாட்டின் சிவகாசி போன்ற இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரபிரதேச மக்களை திரு. தாக்கூர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் பல ஊர்களுடன் காசிக்கு பாரம்பரிய தொடர்பு உண்டு என்றார். இந்த தொடர்புகள் பிரதமரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சோம்நாத், கேதார்நாத் மற்றும் அயோத்தியில் உள்ள கோவில்களை பிரமாண்டமாகவும், தெய்வீகமாகவும் பிரதமர் உருவாக்கியுள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார். அதேபோல் காசியை விஸ்வ திவ்ய பவ்ய காசியாக மாற்றுவார் என்று கூறிய அவர் இதனால் இப்பகுதியின் சுற்றுலா அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். பல்நோக்கு விளையாட்டு அரங்கமான சிக்ரா அரங்கத்தில் நாளை ஆய்வு செய்ய உள்ள அமைச்சர், இங்கு இளைஞர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு வசதிகள் செய்து தரப்படுகிறது என்று குறிப்பிட்டார். மேலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்
இந்தியா குறித்த பாரதியாரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பிரதமரின் தொகுதியில் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார். காசிக்கும் தமிழகத்துக்கும் பழமையான தொடர்பு உள்ளது என்றார். காஞ்சிபுரம் மற்றும் காசி இடையே பட்டுப் புடவைகளைப் போல பொதுவானவை பல உள்ளன என்று அவர் கூறினார். காசி-தமிழ்நாடு இடையே புதிய ரயில் சேவையை அறிவித்த ரயில்வே அமைச்சரை அவர் பாராட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் நினைவாக இருக்காய் நிறுவியதற்காக பிரதமரை அவர் பாராட்டினார்.
இந்தியாவை ஒரே நாடாக உயர்த்திக் காட்டுவதுதான் காசி தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் என்பதை மணிப்பூர் ஆளுநர் டாக்டர் இல. கணேசன் வலியுறுத்தினார். இந்தியாவை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றார். காசிக்கு யாத்திரை செல்வது தமிழகத்தில் உள்ள பழங்கால பாரம்பரியம் என்றார். புனித யாத்திரை என்பது நாட்டின் ரத்த ஓட்டம் போன்றது என்றார். பாரதியார் இந்தியாவை தாயாகக் கருதினார் என்று கூறிய அவர், இந்தியா பற்றிய பாரதியாரின் கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார்
விளையாட்டு விழா:
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று வாரணாசியில் நடைபெற்ற நட்புரீதியான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர்களை பாராட்டி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனும் கலந்து கொண்டார்.

காசி தமிழ் சங்கமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. அனுராக் சிங் தாக்கூர் உரையாற்றினார். மணிப்பூர் ஆளுநர் திரு இல கணேசன், டாக்டர் எல் முருகன், மேகாலயா முன்னாள் ஆளுநர் திரு சண்முகநாதன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

காசி தமிழ்ச்சங்கத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. நான்காவது நாளான நேற்று உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் இடையே நட்புரீதியான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வீரர்களை கவுரவித்த திரு. அனுராக் சிங் தாக்கூர், வாரணாசிக்கு தமிழக வீரர்களை வரவேற்றார்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளுக்கு டாக்டர் எல் முருகன் வாழ்த்து தெரிவித்தார். இன்று தமிழ்க் கவிஞர் பாரதியாரின் பிறந்தநாள் என்பதை நினைவு கூர்ந்த அமைச்சர் அவர் வாரணாசியில் வசித்து வந்ததை சுட்டிக்காட்டினார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”, எனும் பாரதியின் வரிகளை அவர் நினைவுகூர்ந்தார். ஒரே பாரதம் ஒன்றுபட்ட பாரதம் என்ற நோக்கத்தை நினைவாக காசி தமிழ் சங்கமம் என்றும் முன்முயற்சிக்காக பிரதமரை அவர் பாராட்டினார்.
******
SRI / PKV / DL
(Release ID: 1882571)