பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்வியிலிருந்து பட்டம் என்பதைப் பிரித்து வாழ்வாதார வாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டது தேசிய கல்விக் கொள்கை (என்இபி-2020) என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 27 OCT 2022 2:58PM by PIB Chennai

கல்வியிலிருந்து பட்டம் என்பதை பிரித்து வாழ்வாதார வாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டது தேசியக் கல்விக் கொள்கை (என்இபி-2020) என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புவிஅறிவியில் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச  மாநிலம் தாக்கூர்துவாரில் உள்ள கிருஷ்ண மகாவித்யாலயாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் வாய்ப்புகளை வழங்குவது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற புத்தொழில் நடைமுறைக்கும் என்இபி-2020 உறுதுணையாக இருக்கும் என்றார்.

பிரதமர்  திரு நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 உலகளாவிய குறியீட்டின்படி இந்தியாவின்  கல்விக் கொள்கையை மாற்றியமைக்கும் என்று அவர் கூறினார்.  சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் இது மிகப்பெரிய சீர்திருத்தம் என்றும் புதியக் கொள்கை முற்போக்கானதும் தொலைநோக்கு பார்வைகொண்டதும் மட்டுமின்றி 21ம் நூற்றாண்டில் உருவாகி வரும் தேவைகளையும் மனதில் கெண்டது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இது பட்டங்களில்  கவனம் செலுத்துவதைவிட மாணவர்களிடம் உள்ள திறமை, அறிவு, அணுகுமுறை ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கிறது என்றார்.

கல்வியுடன் பட்டங்களை இணைப்பது நமது கல்வி முறையிலும் சமூகத்திலும் பெரும் சுமையாக உள்ளது என்றும் இதனால் படித்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தேசியக் கல்விக் கொள்கை 2020  பல நிலையில் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்குமான  அம்சங்களைக் கொண்டிருப்பதால் மாணவர்களுக்குக் கல்வியில் நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது என்று அவர் கூறினார். மாணவர்களின் கற்றல் மற்றும் உள்ளார்ந்த அணுகுமுறையைச் சார்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் பலவிதமான வேலைவாய்ப்புகளைக் கிடைக்கச் செய்து ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

திறன் இந்தியா இயக்கம் பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், வாழ்க்கையில் வெற்றியடைய மாணவர்கள் பலவகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். அண்மைக்கால திறன்களுடன் இருப்பவர்கள் உலகில் இன்று வியத்தகு செயல்களை செய்கிறார்கள் என்பதற்கு ஏரளாமான உதாரணங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.  புதிய தொழில்கள் தொடங்குவதற்கு அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871247

**************

Anand/SMB/Gee/Sha


(Release ID: 1871277)