வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் 4 மாதங்களில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்து 9,598 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உள்ளது

Posted On: 12 SEP 2022 5:34PM by PIB Chennai

வர்த்தக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் துறையின் தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவின்படி. ஏப்ரல் – ஜூலை 2022-ல் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 9,598 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் (2021-22) இதே காலகட்டத்தில் 7,397 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 

2022-23-ஆம் ஆண்டில் 23.56 பில்லியன் டாலர்  என்ற அளவிற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்கனவே 9.59 பில்லியன் டாலர் அளவிற்கு  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் நடப்பு நிதியாண்டின் 2022-23-ல் முதல் 4 மாதங்களில் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீத அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858735

******



(Release ID: 1858787) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Marathi , Hindi