பாதுகாப்பு அமைச்சகம்

மணிப்பூர் நிலச்சரிவில் பலியான ஆயுதப்படை பெண் வீரர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி

Posted On: 18 AUG 2022 3:37PM by PIB Chennai

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியான பெண் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பெங்டுபி ராணுவ மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், மணிப்பூரில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 61 பெண் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் வழங்கினார்.

 

நிகழ்வில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், வீரர்களின் தியாகத்திற்கு நாடு எப்போதும் கடன் பட்டுள்ளது என்றும், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்திற்கு நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்தித்தர அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டின் சமூக, பொருளாதார தேவைகளில் முக்கிய பங்கு வகிக்க உள்ள ஜிரிபம் - துபுல் - இம்பால் ரயில் பாதை திட்டத்தில் ஆயுதப்படை வீரர்களின் பங்கு அளப்பரியது என பாராட்டினார். அப்பொது, ஆயுதப்படைகளில் இளைஞர்கள் இணைவதற்கு பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவம் எடுத்து வரும் முன்முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852858

***************



(Release ID: 1852970) Visitor Counter : 138