நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தெலங்கானாவில் அரிசி கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது
Posted On:
21 JUL 2022 11:39AM by PIB Chennai
தெலங்கானாவில் உள்ள மத்திய தொகுப்பில் (இந்திய உணவுக் கழகம் மற்றும் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின்கீழ் மாநிலம் வாரியாக) அரிசி கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவுத் திட்டத்தின்கீழ், ஏப்ரல், மே மாதங்களில் தெலங்கானா அரசு ஏழைகளுக்கு நியாய விலை கடைகள் மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யவில்லை என திரு.பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.
ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலனுக்காக பாடுபடுவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஏழைகளின் உரிமை பறிக்கப்படாமல், பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவுத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஏழையும் உரிமை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். தெலங்கானா அரசு ஏற்கனவே, ஏப்ரல், மே மாதங்களுக்கு பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவுத்திட்டத்திலிருந்து பெற்றுள்ளதாகவும், ஆனால் அது விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இதனால் மத்திய அரசின் பலன்கள் பயனாளிகளுக்கு கிடைக்காமல் போய் விட்டதாகவும் திரு பியூஷ்கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843322
***************
(Release ID: 1843378)