நிதி அமைச்சகம்

சுதந்திரத்தின அமிர்தப் பெருவிழாவின் சிறப்பு வார விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மத்திய நிதிஅமைச்சகத்தின்கீழ், தில்லி சுங்க இலாகாவால் ஹரியானாவில் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன

Posted On: 08 JUN 2022 12:50PM by PIB Chennai

ஜுன் 7-ம் தேதியன்று, தில்லி சுங்க இலாகாவால், ஹரியானா மாநிலத்தில் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுதந்திரதின அமிர்தப் பெருவிழா சிறப்பு வாரத்தின் ஒருபகுதியாக, மரக்கன்றுகள் நடும் விழா ஜுன் 6 முதல் ஜுன் 12 வரை நடைபெறுகிறது. சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையிலும், சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை போற்றும் விதமாகவும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுதந்திர தின அமிர்தப் பெருவிழா சிறப்புவார விழா பிரதமர் திரு.நரேந்திர மோடியால், ஜுன் 6-ம் தேதி தில்லி விக்யான் பவனில் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தியின் ஆங்கில இணைப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832039

***************



(Release ID: 1832170) Visitor Counter : 144


Read this release in: English , Urdu , Hindi , Telugu