பாதுகாப்பு அமைச்சகம்

'தற்சார்பு இந்தியா திட்டம்' மூலம் ரூ.76,390 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்

Posted On: 06 JUN 2022 4:30PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் “தற்சார்பு இந்தியா திட்டத்தின்” அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் இன்று (ஜுன் 6 2022) நடைபெற்றது. இதில், ரூ.76,390 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதலுக்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது இந்தியாவின் பாதுகாப்புத் தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்கவும் உதவும்.

இந்திய ராணுவத்துக்கான பல்வேறு வாகனங்கள், பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ராணுவத் தளவாடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ரூ.36,000 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளை அறிந்துக் கொள்ள பின்வரும் ஆங்கில இணைப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831550

***************

(Release ID: 1831550)



(Release ID: 1831593) Visitor Counter : 224


Read this release in: English , Urdu , Marathi , Hindi , Odia