பிரதமர் அலுவலகம்

மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் இரங்கல்


பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு

Posted On: 18 MAY 2022 2:56PM by PIB Chennai

குஜராத்  மாநிலம் மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.   பலியானவர்களின் குடும்பத்தினருக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர்  அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ;

மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட துயரச் சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோர்பி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமரின்  தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2லட்சம்  வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்” 

***



(Release ID: 1826379) Visitor Counter : 141