சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆரோக்கிய சிந்தனை முகாம் நிறைவு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உரை

Posted On: 07 MAY 2022 5:27PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, மே 5 முதல் 7 வரை குஜராத்தின் கெவாடியாவில் 3 நாட்கள் நடந்த ஆரோக்கிய சிந்தனை முகாமின் நிறைவு நாள் நிகழ்வில்    உரையாற்றினார். இந்த நிகழ்வில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால், மாநில சுகாதார அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள்நிதி ஆயோக், ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சுமார் 25 சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்பதைப் பாராட்டிய அவர், "மாநிலங்களால் சிறந்த நடைமுறைகளை வழங்குவதன் மூலம் அறிவின் ஆழமான நுண்ணறிவால் நாம் வளப்படுத்தப்பட்டுள்ளோம். இது பயனுள்ள திறன் பற்றிய அறிவை எங்களுக்கு வழங்கியது.  கடைசி மைலில் உள்ள குடிமகன் சுகாதார சேவைகளை வழங்குவதே எங்கள் முன்னுரிமையாக உள்ளது என அவர் கூறினார்.

சுகாதாரம் என்பது வர்த்தகம் அல்ல, நமக்கான சேவையாகும் என அமைச்சர் வலியுறுத்தினார். மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும் 'இந்தியாவின் மூலம் குணப்படுத்துதல்' மற்றும் 'இந்தியாவில் குணமடைதல்' ஆகிய இரண்டும் நமது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் இரண்டு முக்கிய தூண்கள் ஆகும், இது இந்தியாவை உலகளாவிய சுகாதாரத் தலைவராக நிலைநிறுத்துகிறது என்று பேசினார்.

காசநோயாளிகள் அனைவரும் தத்தெடுத்து அவர்களின் நல்வாழ்வு, மக்களுக்கு ஊட்டச்சத்து, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் விரைவில் தொடங்கப்படவுள்ள 'காசநோயாளி/கிராமத்தை தத்தெடுப்பு' திட்டத்தில் இணையுமாறு அனைவரையும் டாக்டர் மாண்டவியா கேட்டுக் கொண்டார். "இது 2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற நமது இலக்குக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்" என்று அவர் கூறினார்.

மேலும் இந்த மாநாடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு காசநோய் இல்லாத இந்தியா மற்றும் கண்புரை அறுவை சிகிச்சையின் பின்னடைவை நீக்குதல் உள்ளிட்ட துறை சார்ந்த இலக்குகளை வழங்கியுள்ளது என்றும் டாக்டர் மாண்டவியா தெரிவித்தார். ஜூன் 1 ஆம் தேதி முதல் கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார் .

தொடர்ந்து மத்திய சுகாதார துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பேசுகையில், கோவிட்19க்கு எதிரான போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் கூட்டு அணுகுமுறையைப் பாராட்டிய அவர், 190 கோடி தடுப்பூசி அளவுகளின் முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக மாநிலங்களைப் பாராட்டினார். "சுகாதாரத் துறையில் இந்தியாவை 'விஸ்வ குருவாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என்றும் கூறினார்.

****

 



(Release ID: 1823539) Visitor Counter : 368