உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

'விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை, 2022' பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீரில் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ பயிலரங்கு

Posted On: 26 APR 2022 9:30AM by PIB Chennai

'சுதந்திரப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக'  2022 ஏப்ரல் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 'விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை, 2022என்ற பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம், பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ பயிலரங்கை நடத்தியது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கம் வால்நட் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்ததாகும்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00269XG.jpg

வால்நட் பதப்படுத்துதல் துறையில் மேம்பட்டு வரும் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து உணவு-தொழில்நுட்ப பங்குதாரர்கள் விவாதிக்கும் களமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிலரங்கை கிஷ்த்வார் மாவட்ட துணை ஆணையர் திரு. அசோக் குமார் சர்மா தொடங்கி வைத்தார்.

பல்வேறு முக்கிய வல்லுநர்களோடு, சுமார் 300 விவசாயிகள், தோட்டக்காரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்த பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட மத்திய அரசு நிதியுதவி பெற்ற பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம், அமைப்புசாரா உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள குறு நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், துறையின் முறைப்படுத்தலை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது.

2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து வருட காலத்திற்கு ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில்,  2,00,000 குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களுக்கு நேரடி உதவி வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை அணுகவும்: https://pmfme.mofpi.gov.in/pmfme/#/Home-Page

****



(Release ID: 1820143) Visitor Counter : 142