குடியரசுத் தலைவர் செயலகம்

வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 13 APR 2022 5:17PM by PIB Chennai

வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள் நமது பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதோடு நமது ஒற்றுமையை வலியுறுத்துகிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் அயராது உழைக்கும் உழவர் சமுதாயத்திற்கு திருவிழாக்கள் இன்பம் தரும் நிகழ்வுகளாகும்.

இந்த சந்தர்ப்பத்தில், அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியைப் பரப்பவும் தீர்மானிப்போம்," என்று தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816448

***************



(Release ID: 1816552) Visitor Counter : 123