நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் 690 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம்; தமிழகத்தில் பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள்
Posted On:
06 APR 2022 3:59PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 726 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, 690 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் 80 கோடி பயனாளிகளுக்கு கூடுதல் உணவு தானியங்களை (அரிசி/கோதுமை) இலவசமாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை வழங்கியது.
மேலும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் பெயர்வுத்திறன் வசதியின் கீழ் சுமார் 10 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் நடைபெற்ற மாநிலத்திற்குள்ளான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 61,58,39,351 ஆகவும், மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 24,65,014 ஆகவும், மொத்த பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 61,83,04,365 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலத்திற்குள்ளான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 15,71,962 ஆகவும், மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4,950 ஆகவும், மொத்த பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 15,76,912 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814102
***************
(Release ID: 1814246)