எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தித் திறனின் பங்கை 2030-க்குள் 32% ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 MAR 2022 5:13PM by PIB Chennai

மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்புகளின்படி, 2030 ஆம் ஆண்டில் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி திறனின் பங்கு எரிசக்தி ஆற்றல் கலவையில் சுமார் 32% ஆக இருக்கும்: இதன்  தற்போதைய பங்கு 52% ஆகும்.

சில்லறை நுகர்வோர் கட்டணங்கள், மின்சாரச் செலவு உட்பட பல வகையான செலவுகளைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலக்  கட்டுப்பாட்டாளர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. மின்சாரத் துறையில் புதுப்பிக்கத்தக்க சக்தியின் பெரிய அளவிலான ஒருங்கிணைப்புடன், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது:மேலும்  சூரிய மின்சக்திக்கான மிகக் குறைந்த கண்டறியப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 1.99 ஆகும். இது பல நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் மின்  கட்டணத்தை விடக்  குறைவாகும். .

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அனல் மற்றும் ஹைட்ரோ திட்டங்களுடன் இணைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது நுகர்வோரின் ஒட்டுமொத்த மின் செலவையும் குறைக்கும்.

குசும் திட்டத்தின் கீழ் பசுமை ஆற்றல் வழித்தடங்கள் மற்றும் விவசாய தீவனங்கள் / பம்ப் செட்களை சூரிய ஒளி மின்சார மயமாக்குதல் ஆகியவற்றிற்கான மானிய உதவியை அரசாங்கம் விரிவுபடுத்துகிறது.

இந்தத்  தகவலை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

************


(रिलीज़ आईडी: 1808406) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi