பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக திட்ட பயனாளிகளுடன், பிரதமர் மார்ச் 7ம் தேதி கலந்துரையாடுகிறார்

प्रविष्टि तिथि: 06 MAR 2022 7:16PM by PIB Chennai

மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு, மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்கள், மக்கள் மருந்தக திட்டத்தின் பயனாளிகளுடன் மார்ச் 7ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.  இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, ‘‘மக்கள் மருந்தகம் - நிறைவான பயன்’’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகிறார். 

பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தக திட்டத்தின் பயன்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, மக்கள் மருந்தக வாரம், நாடு முழுவதும்  மார்ச் 1ம் தேதி முதல்  கொண்டாடப்படுகிறது.  இந்த வாரத்தில் மக்கள் மருந்தக உறுதி யாத்திரை, தாய் சக்தி சம்மான், குழந்தைகளுக்கான மக்கள் மருந்தகம்,  மக்கள் மருந்தக விழிப்புணர்வு திட்டம்,  வாருங்கள்- மக்கள் மருந்தக நண்பராகுங்கள், மக்கள் மருந்தக ஆரோக்கிய மேளா போன்ற திட்டங்கள் இந்த வாரத்தில் நடத்தப்படுகின்றன. 

மக்களுக்கு மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும். நாடு முழுவதும், தற்போது 8,600க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள்  உள்ளன.

***********


(रिलीज़ आईडी: 1803434) आगंतुक पटल : 402
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam