இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காந்திநகரில் உள்ள பிராந்திய மையத்தில் பாரா மையத்தை இந்திய விளையாட்டு ஆணையம் நிறுவியுள்ளது: திரு அனுராக் தாகூர்

Posted On: 10 FEB 2022 4:36PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதில் அளித்த மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

கேலோ இந்தியா திட்டத்தின் "மாற்றுத்திறனாளிகளிடையே விளையாட்டை ஊக்குவித்தல்" திட்டத்தின் கீழ், ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத், அகில இந்திய காதுகேளாதோர் மற்றும் பாராலிம்பிக்ஸ் குழு ஆகிய தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும், கேலோ இந்தியா திட்டத்தின் "திறமை தேடல் மற்றும் மேம்பாடு" திட்டத்தின் கீழ், நான்கு பாரா-விளையாட்டு பிரிவுகளில் 29 மாற்றுத்திறனாளிகள் கேலோ இந்தியா தடகள வீரர்களாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மாதத்திற்கு ரூ 10,000 வீதம் வழங்கப்படுகிறது.

 

கூடுதலாக, காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பிராந்திய மையத்தில் பாரா மையத்தை ஆணையம் நிறுவியுள்ளது. தடகளம், நீச்சல், பளு தூக்குதல் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய பிரிவுகளில் இந்த மையம் பயிற்சி அளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், உணவு மற்றும் தங்குமிடம், விளையாட்டு கருவிகள், கல்வி செலவுகள், மருத்துவம்/காப்பீடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்ட விதிமுறைகளின்படி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுன்கிறன. ஆணையத்தின் மற்ற பெரும்பாலான மையங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் மாற்றப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1797245

**********


(Release ID: 1797408)