குடியரசுத் தலைவர் செயலகம்
பிப்ரவரி 10 முதல் 14 வரை மஹாராஷ்ட்ரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
09 FEB 2022 6:40PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 14-ம் தேதி வரை மஹாராஷ்ட்ரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
பிப்ரவரி 11-அன்று மும்பை ஆளுநர் மாளிகையில் கட்டப்பட்டுள்ள புதிய தர்பார் அரங்கை திறந்து வைக்கும் குடியரசுத்தலைவர், 12-ம் தேதி மஹாராஷ்ட்ரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்திற்குட்பட்ட அம்பதவே கிராமத்தில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நினைவிடத்தை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று ஹைதராபாதில் நடைபெறவுள்ள மகான் ராமனுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பங்கேற்று, ஸ்ரீ ராமனுஜாச்சாரியாரின் தங்க சிலையை திறந்து வைக்க உள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1796991)
வருகையாளர் எண்ணிக்கை : 181