சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் 15 கோடிக்கும் அதிகமான தேசிய டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன

Posted On: 04 FEB 2022 5:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் என்று தற்போது அழைக்கப்படும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் 2020 ஆகஸ்ட் 15 அன்று முதல் கட்டமாக அந்தமான் & நிக்கோபார், சண்டிகர், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய 6 யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் ஆரம்ப கட்டம் 2020 ஆகஸ்ட் 15 முதல் 2001 செப்டம்பர் 27 வரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சுகாதார அடையாள அட்டை, சுகாதாரப்  பணியாளர்கள் பதிவகம், சுகாதார வசதிகள் பதிவகம் மற்றும் தரவுப்  பரிமாற்றத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய மூன்று முக்கியப்  பதிவகங்கள் உருவாக்கப்பட்டு இந்த யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டன.

 

 

2022 ஜனவரி 25 நிலவரப்படி நாடு முழுவதும் 15,05,92,811 சுகாதார அடையாள அட்டைகள் (தற்போது ஆபா- ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் என்று அழைக்கப்படுகின்றன) உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் சூழலியலின் கீழ் 15,016 சுகாதார வசதிகள் மற்றும் 8,378 மருத்துவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795425  

---



(Release ID: 1795581) Visitor Counter : 232


Read this release in: English , Urdu , Marathi , Telugu