உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுத படையினருக்கு ஆயுஷ்மான் அட்டைகள்: மத்திய அமைச்சர் திரு நித்யானந் ராய் வழங்கினார்

प्रविष्टि तिथि: 05 JAN 2022 4:24PM by PIB Chennai

மத்திய ஆயுத படைப்பிரிவுகளைச் சேர்ந்த தலா 10 பேருக்கு,  ஆயுஷ்மான் அட்டைகளை  மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந் ராய் புதுதில்லியில் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஆயுத படைகளின் தலைமை இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நித்யானந்த ராய், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் / ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை கடந்த 2018ம் ஆண்டு பிரதமரால் தொடங்கப்பட்டது என்றும், அதன்பின் இத்திட்டம், மத்திய ஆயுத படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாவால்  கடந்தாண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 பிறந்த தினத்தில் தொடங்கப்பட்டது என்றார்.

இத்திட்டத்தின் கீழ், மத்திய ஆயுத படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 35 லட்சம் பேர், இலவச சிகிச்சை பெற  ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய  பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787690

*************


(रिलीज़ आईडी: 1787818) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu