சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மும்பையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன

Posted On: 23 DEC 2021 5:40PM by PIB Chennai

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடகிழக்கு மும்பையில் உள்ள ராமானந்த் ஆர்யா டி.ஏ.வி கல்லூரியில் டிசம்பர் 24ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத்துறை நடத்துகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 1,416 பேருக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் 2,588 உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அதவாலே கலந்து கொள்கிறார்.

                  

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784611

************



(Release ID: 1784681) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Punjabi