விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இயற்கை விவசாயம் விரிவாக்கம்

பாரம்பர்ய முறை விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் (பிகேவிஒய்) மற்றும் வடகிழக்கு பகுதியில் இயற்கை முறை விவசாய மதிப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவை மூலம் கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்து வருகிறது.

Posted On: 17 DEC 2021 3:15PM by PIB Chennai

இந்த இரு திட்டங்களும், இயற்கை முறை விவசாயிகளுக்குத்  தேவையான உதவிகளை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் 9,86,298 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பாரம்பர்ய முறை விவசாயிகள் மேம்பாட்டுத்   திட்டம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தொகுப்பு முறையில்  இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு  விதைகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிகொல்லி மருந்தகள், மண்புழு உரம், தாவர உரம் போன்றவை வாங்க  3 ஆண்டுகளுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதில் ரூ.31,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அளிக்கப்படுகிறது.

பிகேவிஒய் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுக்காக, விவசாயி ஒருவருக்கு, 3 ஆண்டுகளுக்கு ரூ.7, 500 நிதியுதவி அளிக்கப்படுகிறது.

2020-21ம் ஆண்டில் பிகேவிஒய் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.381.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிகேவிஒய் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இத்தகவலை மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய வோளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

 

 



(Release ID: 1782767) Visitor Counter : 267


Read this release in: Telugu , English , Urdu , Bengali