குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பொம்மை ஆலைகள்

Posted On: 16 DEC 2021 12:43PM by PIB Chennai

உள்நாட்டு பொம்மைத் தொழிலை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கிறது.  பொம்மைத் தொழில்கள் உட்பட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் புத்தாக்கம் தொடர்பான தேவைகள் மற்றும் வடிவமைப்புக்கு குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்நுட்ப மையம் பணியாற்றுகிறது. இது தவிர தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப, தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் நடத்துகிறது.  பாரம்பரியத் தொழில்கள், மறு சீரமைப்பு நிதித்திட்டத்தின் கீழ், வடிவமைப்பு மையங்கள், மூலப்பொருட்கள் வங்கி, திறன் மேம்பாடு போன்ற உதவிகள் அளிக்கப்படுகின்றன.  இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 14 பொம்மை ஆலைகள் ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.41.60 கோடி மதிப்பிலான இத்திட்டம் 8,839 கலைஞர்களுக்கு பயன் அளிக்கும்.

மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782134

                     ************



(Release ID: 1782350) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Telugu