சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் குறித்த சமீபத்திய தகவல்கள்
Posted On:
14 DEC 2021 2:18PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக 2010-ல் தொடங்கப்பட்ட புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் மற்றும் நிதி வளங்களுக்கு உட்பட்டு இவை வழங்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்புக்கான விழிப்புணர்வு உருவாக்கம், ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை மற்றும் தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சைக்கான சுகாதார வசதிகளை பரிந்துரைப்பதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
2021-22-ம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தொற்று அல்லாத நோய்களுக்கான திட்டத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 56118.07 லட்சம் ஆகும்.
புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் 677 சிகிச்சை மையங்கள், 187 மாவட்ட இதய சிகிச்சை பிரிவுகள், 266 மாவட்ட பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக சுகாதார மைய அளவில் 5392 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781273
*******
(Release ID: 1781354)
Visitor Counter : 192