குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாளை குஜராத் செல்கிறார் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2021 6:29PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்  மோம்பாட்டு மையத்தின் புதிய கட்டிடத்தை, இத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு நாராயண் ராணே தொடங்கி வைக்கிறார்.

புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான விருதுகளையும் அவர் வழங்குகிறார். உலகளாவிய தொழில்முனைவு கண்காணிப்பு அறிக்கை, ‘தறி முதல் வணிக வளாகம் வரை’ என்ற கையேடு ஆகியவற்றையும்  மத்திய அமைச்சர் வெளியிடுகிறார்.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் கண்காட்சியை பார்வையிடுவதோடு, நூலகம் மற்றும் அலுவலக கட்டிடத்தையும் திரு ராணே தொடங்கி வைக்கிறார்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1777863) வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी