குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு வழங்கப்படும் ஆதரவு

Posted On: 02 DEC 2021 2:01PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாரயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

2021 ஜூன் 4 தேதியிட்ட அதன் இயக்குநர்கள் கூட்டத்தில், இந்திய அரசின் “சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரிவுப்படுத்துதல்” திட்டத்திற்கு உதவுவதற்காக $500 மில்லியன் ( 3750 கோடி) கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இத்திட்டம் கொவிட் -19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு முயற்சியாகும். அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777170

                                                       *****



(Release ID: 1777315) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Marathi , Telugu