குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

Posted On: 18 NOV 2021 3:53PM by PIB Chennai

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கய்ய நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு

குருநானக் தேவ் பிறந்த நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள் மற்றும் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக் தேவ், தமது உன்னத வாழ்வின் மூலமாக, உண்மை, கருணை மற்றும் நேர்மையின் சின்னமாகத் திகழ்கிறார்அவரது  பக்தி போதனைகள், நேர்மையைப் பின்பற்றுவதற்கு நமக்கு வழிகாட்டுவதோடு, சாதி, இனம் அல்லது மத வேறுபாடின்றி, மனிதகுலத்தைச் சேர்ந்த அனைவரிடமும் மரியாதை செலுத்துவதற்கு நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

வாழ்க்கையில் நன்னெறிகளைப் பின்பற்ற  வேண்டுமென, குரு நானக் தேவ் நமக்கு போதித்துள்ளார்.    இந்தியாவின் உன்னதமான ஆன்மீக நெறிமுறைகளுக்கு அவர் ஒரு ஒளிமயமான இறைத்தூதராகத் திகழ்வதுடன், ஆன்மீகத்தை சாமான்ய மனிதரிடமும் மதத்தை உண்மையாகவே ஜனநாயக ரீதியாகக் கொண்டுசென்றவர் ஆவார்.   

அவரது நற்செய்தி, மனிதநேயம் மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதில், நமக்குத் தொடர்ந்து வழிகாட்டுவதாக இருக்கும். ‘‘

                                                  *****  



(Release ID: 1773021) Visitor Counter : 183