எஃகுத்துறை அமைச்சகம்
அடுத்தகட்ட விரிவாக்கத்துக்கு செல்ல தயார்: ஆண்டு பொது கூட்டத்தில் செயில் நிறுவன தலைவர் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2021 2:49PM by PIB Chennai
எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செயில் (இந்திய எஃகு ஆணைய நிறுவனம்) தனது 49வது ஆண்டு பொது கூட்டத்தை, இன்று காணொலி காட்சிமூலம் நடத்தியது.
இதில் செயில் நிறுவன தலைவர் திருமதி சோமா மொந்தல், தில்லியில் உள்ள தலைமையகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்குதாரர்களிடம் உரையாற்றினார். அப்போது அடுத்த கட்ட விரிவாக்கத்துக்கு செல்ல செயில் நிறுவனம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
2021ம் நிதியாண்டில், செயில் நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதிய உச்சத்துக்கு செல்லும் என அவர் கூறினார். செயில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருவாய் ரூ. 13,740 கோடி. இது 23 சதவீதம் அதிகம். செயில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758897
----
(வெளியீட்டு அடையாள எண்: 1759013)
வருகையாளர் எண்ணிக்கை : 202