குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு படைப்பிரிவு பணி மாறும் விழா: அக்டோபர் 9 முதல் மீண்டும் தொடக்கம்

Posted On: 24 SEP 2021 5:39PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படைப்பிரிவுகள் பணிமாறும் விழா ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த விழா, அக்டோபர் 9ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இதை பார்வையிட https://presidentofindia.nic.in அல்லது  https://rashtrapatisachivalaya.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

*****************



(Release ID: 1757819) Visitor Counter : 207


Read this release in: Urdu , English , Hindi , Punjabi