நிதி அமைச்சகம்

தில்லி, குஜராத் மற்றும் தாத்ராவில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 02 SEP 2021 5:49PM by PIB Chennai

தில்லியில் தலைமை அலுவலகத்தையும், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் தாஹேஜில் தொழிற்சாலைகளையும் கொண்டு இயங்கி வரும் செயற்கை நூலிழை மற்றும் பாலியஸ்டர் சிப்புகளை தயாரித்து விநியோகிக்கும் நிறுவனத்தில் 2021 செப்டம்பர் 1 அன்று தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டது. 

கணக்கில் வராத பரிவர்த்தனைகளில் அக்குழுமம் ஈடுபட்டதற்கான ஆவணங்கள், தாள்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவை தேடுதலின் போது கண்டறியப்பட்டன. கணக்கு பதிவேடுகளுக்கு வெளியே செய்யப்பட்ட பரிவர்த்தனைகள், பணம் செலுத்தி செய்த கொள்முதல்கள், விற்பனையை குறைத்து காட்டுவது உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டன.

போலி நிறுவனங்கள் வாயிலாக போலி கடன்கள் மூலம் கணக்கில் வராத சொந்தப் பணமான ரூ 380 கோடியை கடந்த சில வருடங்களில் மடைமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், போலி நிறுவனங்கள் மூலம் ரூ 40 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனை தரவுகளுக்காக போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதை அவற்றின் இயக்குநர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

ரூ 154 கோடி மதிப்பிலான போலி கொள்முதல்களுக்கான ஆதாரமும் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத நகையும் கண்டறியப்பட்டு, 11 பாதுகாப்பு பெட்டகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

தேடுதல் நடவடிக்கையும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751461

*****************



(Release ID: 1751523) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Hindi , Telugu