உள்துறை அமைச்சகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1380 காவல் பணியாளர்களுக்கு விருது

प्रविष्टि तिथि: 14 AUG 2021 11:27AM by PIB Chennai

2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,380 காவல் பணியாளர்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன.  மிகவும் குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கங்கள் 2 காவல்துறைப் பணியாளர்களுக்கும், மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் 628 பேருக்கும் வழங்கப்பட்டன. சிறப்பாகப் பணியாற்றுவதற்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் 88 பேருக்கும், போற்றத்தக்க வகையில் சேவையாற்றியதற்கான காவல் பதக்கம் 662 பேருக்கும் அளிக்கப்பட்டன.

ஜம்மு  காஷ்மீர் பகுதியில் மகத்தான பணி ஆற்றிய 398 பேருக்கும், இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் மகத்தான பணியாற்றிய 155 பேருக்கும், வடகிழக்குப்பகுதியில் மகத்தான பணியாற்றிய 27 பேருக்கும் வழங்கப்பட்டன. மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் பெற்றவர்களில் 256 பேர் ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், 151 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள், 23 பேர் இந்தோ- திபெத் எல்லை  பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், 67 பேர் ஒடிசா காவல் துறையையும் 25 பேர் மகாராஷ்டிராவையும், 20 பேர் சத்தீஸ்கரையும் சேர்ந்தவர்கள். இதர நபர்கள் இதர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஆயுதக்காவல் படைகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745698

*****************


(रिलीज़ आईडी: 1745865) आगंतुक पटल : 315
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , Odia , Urdu , हिन्दी , Marathi , Bengali