எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு ஆலைகளின் நவீனமயமாக்கல்

Posted On: 11 AUG 2021 3:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட துறையான எஃகு துறையில் அமைச்சகத்தின் பங்கு வசதிகளை அளிப்பது மட்டுமே ஆகும். தொழில்நுட்ப மற்றும் வர்த்தக தேவைகளை கருத்தில் கொண்டு எஃகு ஆலைகளை நவீனப்படுத்துவது குறித்த முடிவு அந்தந்த நிறுவனங்களால் எடுக்கப்படுகிறது.

இரு பொதுத்துறை எஃகு நிறுவனங்களான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (செயில்) மற்றும் ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட் (ஆர் என் எல்) ஆகியவை கடந்த தசாப்தத்தில் தங்களது ஆலைகளை நவீனப்படுத்தி உள்ளனபிலாய், பொகோரோ, ரூர்கேலா, துர்காபூர் மற்றும் பர்ன்பூரில் உள்ள தனது ஆலைகளை செயில் நிறுவனமும், விசாகப்பட்டினத்தில் உள்ள தனது ஆலையை ஆர் என் எல் நிறுவனமும் நவீனப்படுத்தியுள்ளன.

எஃகு ஆலைகளின் நவீனமயமாக்கலுக்கு இந்திய அரசு எந்தவிதமான நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. தொடர்புடைய நிறுவனங்களின் சொந்த நிதியிலிருந்து அல்லது கடன் வாங்கியோ ஆலைகளின் நவீனமயமாக்கல் செய்யப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744786

------

 



(Release ID: 1744916) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Telugu