ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வே 2021 ஜூலை மாதத்தில் அதிக அளவில் சரக்குகளைக் கையாண்டுள்ளது
ஜூலையில் 112.72 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றி சாதனை
கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் சரக்குப் போக்குவரத்து அதிகபட்சமாக 17.54 மில்லியன் டன் உயர்வு
2020 செப்டம்பர் முதல் கடந்த 11 மாதங்களாக சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரிப்பு
Posted On:
02 AUG 2021 5:01PM by PIB Chennai
இந்திய ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து ஜூலை 2021-இல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது. கடந்த 2020 செப்டம்பர் முதல் தொடர்ந்து 11 மாதங்களாக சரக்குப் போக்குவரத்து அந்தந்த மாதத்தில் இதுவரையில்லாத அளவாக உயர்வு கண்டு வருகிறது.
இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத அளவாக 17.54 மில்லியன் டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.43 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2019 ஜூலையில் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்து 99.74 சதவிகிதமாக இருந்த நிலையில் 2021 ஜூலையில் இது 112.72 மில்லியன் டன்களாகவும், 2020 ஜூலையில் இது 95.18 மில்லியன் டன்களாக இருந்தது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நிலக்கரி, சிமெண்ட், எஃகு, இரும்பு தாது, உணவு தானியங்கள், கண்டெய்னர்கள் உள்ளிட்டவை அதிக அளவில் ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஜூலை 2020 வரை ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்து 336.74 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், நடப்பு 2021-22 நிதியாண்டில் ஜூலை வரையிலான சரக்கு போக்குவரத்து 451.97 மில்லியன் டன்களாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741527
*****************
(Release ID: 1741621)
Visitor Counter : 184