மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்தவுள்ளது தேசிய ஆராய்ச்சி அமைப்பு

Posted On: 26 JUL 2021 1:23PM by PIB Chennai

தேசிய ஆராய்ச்சி அமைப்பு மூலம் நாட்டில் ஆராய்ச்சி சூழல்  வலுப்படுத்தப்படவுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்

அவர் மக்களவையில் இன்று கூறியதாவது:

நாட்டில் உள்ள ஆராய்ச்சி சூழல்முறையை வலுப்படுத்த தேசிய ஆராய்ச்சி அமைப்பை (NRF) உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்விநிறுவனங்கள் மற்றும் தொழில்துறை இடையே, என்ஆர்எப்  ஒரே அமைப்பின் கீழ், இணைப்பை மேம்படுத்தும் என கருதப்படுகிறதுதேசிய ஆராய்ச்சி அமைப்பின்  மொத்த உத்தேச செலவு ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி.

தேசிய கல்விக்கொள்கை 2020-, 34 ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அரசு கடந்த 29-7-2020 அன்று அறிவித்தது. இந்த கொள்கை, கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியில் மாநில மொழிகளின் பயன்பாட்டை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்பது முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அவற்றின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738996

******

(Release ID: 1738996)



(Release ID: 1739072) Visitor Counter : 201