ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ 5,009 கோடியை கர்நாடகாவிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு

Posted On: 08 JUL 2021 5:29PM by PIB Chennai

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீரை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ 5,009 கோடியை 2021-22-ம் ஆண்டில் கர்நாடகாவிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  2020-21-ம் வருடம் ரூ 1,189.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நான்கு மடங்கு அதிகமான இந்த ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலும் 2023-ம் வருடத்திற்குள் குடி தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க மாநிலத்திற்கு முழு உதவி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கர்நாடகாவில் உள்ள 91.19 லட்சம் வீடுகளில், 29.96 லட்சம் வீடுகளுக்கு (32.86%) குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2019 ஆகஸ்ட் 15 அன்று ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட போது, 24.51 லட்சம் வீடுகளுக்கு (26.88 சதவீதம்) குழாய் இணைப்பு இருந்தது. 22 மாதங்களில் 5.44 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733762


(Release ID: 1733959) Visitor Counter : 149
Read this release in: English , Urdu , Hindi , Kannada