புவி அறிவியல் அமைச்சகம்

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும்

Posted On: 04 JUL 2021 5:39PM by PIB Chennai

தில்லி தேசிய தலைநகர் பகுதியில், காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது, ஆனால் இன்று மிதமான அளவில் இருக்கும்.  ஜூலை 5 மற்றும் 6ம் தேதிகளிலும், காற்றின் தரம் மிதமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றில் மாசு அளவு பிஎம் 10 என்ற அளவில் இருக்கும்.  அடுத்த 5 நாட்களில் காற்றின் தரம் மிதமாக இருக்கும் மற்றும் மழைக்குப்பின் திருப்திகரமான அளவில் மேம்படும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732647

*****************



(Release ID: 1732652) Visitor Counter : 208


Read this release in: English , Urdu , Hindi