புவி அறிவியல் அமைச்சகம்

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் திருப்தி: வானிலை முன்னறிவிப்பு மையம் தகவல்

Posted On: 22 JUN 2021 2:42PM by PIB Chennai

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் திருப்தியாக உள்ளது என  வானிலை முன்னறிவிப்பு மையம்  தெரிவித்துள்ளது. 

இது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி - தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்று திருப்திகரமாக மிதமான பிரிவில் இருக்கும். நாளை மற்றும் நாளை மறுதினம் காற்றின் தரம் சற்று மோசமானலும், மிதமான பிரிவில் தொடர்ந்து இருக்கும்.

வலுவான மேலடுக்கு காற்று தூசியை ஏற்படுத்தலாம். காற்று மாசு அளவு  பிஎம் 10 என்ற அளவில் இருக்கும். தில்லியில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றின் தரம் திருப்திகரமாக மிதமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729357

*****************



(Release ID: 1729424) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Hindi