அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது: ஆய்வில் தகவல்

Posted On: 17 JUN 2021 3:47PM by PIB Chennai

நாள்பட்ட இடுப்பு வலி, யோகா மூலம் குறைவது, எய்ம்ஸ் டாக்டர்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம்வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும் ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்பு வலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல் நெகிழ்வுதன்மையை  அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்

நாள்பட்ட இடுப்பு வலியில்யோகாவின் தாக்கத்தை மதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல் துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்

3 ஆண்டுகளாக இடுப்பு வலியால் அவதிப்படும் 50 வயது நோயாளிகள் 100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 வாரங்கள் மேற்கொண்ட முறையான யோகா பயிற்சிக்குப்பின்அவர்களிடம் உணர்வு அளவீட்டு பரிசோதனை (QST) மேற்கொள்ளப்பட்டது. இதில் குளிர்காலத்தில் ரத்தம் ஓட்டம் குறைவால் ஏற்படும் இடுப்பு வலி குறைந்துள்ளது. வலியை தாங்கும் சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளது. நோயாளிகளிடம்  பெருமூளையின் செயல்பாடுகள் உற்சாகம் அடைந்து, நெகிழ்வுதன்மை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது

நாள்பட்ட இடுப்பு வலியுள்ள நோயாளிகள், 4 வாரங்கள் யோகா பயிற்சி மேற்கொண்டபின், வழக்கமான சிகிச்சையை விட வலி குறைந்துள்ளது, முதுகுத்தண்டின் நெகிழ்வு அதிகரித்துள்ளது.

வீட்டில் நீண்ட காலம் யோகா செய்தால், செலவில்லாமல் அதிக பலன்களை பெற முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது வலியை மட்டும் போக்காமல், ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சுகாதார பலன்களை அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727902

-----



(Release ID: 1727959) Visitor Counter : 176