பாதுகாப்பு அமைச்சகம்

மேற்கு ஏர் கமாண்ட் தலைமையக நிர்வாகத்தின் மூத்த பொறுப்பு அதிகாரியாக ஏர் வைஸ் மார்ஷல் பி எஸ் கர்கரே பொறுப்பேற்றார்

Posted On: 23 APR 2021 7:43PM by PIB Chennai

மேற்கு ஏர் கமாண்ட் தலைமையக நிர்வாகத்தின் மூத்த பொறுப்பு அதிகாரியாக ஏர் வைஸ் மார்ஷல் பி எஸ் கர்கரே பொறுப்பேற்றார். விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் கே அனந்தராமனிடம் இருந்து 2021 பிப்ரவரி 1 அன்று இந்த பதவியை அவர் ஏற்றுக்கொண்டார்.

1987 டிசம்பர் 19 அன்று நிர்வாக கிளையில் ஏர் வைஸ் மார்ஷல் பி எஸ் கர்கரே இணைத்துக் கொள்ளப்பட்டார். கமாண்ட் தலைமையகம் மற்றும் விமானப்படை தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கான கல்லூரி ஆகியவற்றில் பயின்ற ஏர் வைஸ் மார்ஷல் பி எஸ் கர்கரே, பாதுகாப்பு மேலாண்மைக்கான கல்லூரியின் இயக்கும் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

மேற்கு ஏர் கமாண்ட் தலைமையக நிர்வாகத்தின் மூத்த பொறுப்பு அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன், விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்) ‘ஏர் கமோடோர் விமானப்படை பணிகள்பதவியை ஏர் வைஸ் மார்ஷல் பி எஸ் கர்கரே வகித்தார்.

-----



(Release ID: 1713639) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Punjabi