குடியரசுத் தலைவர் செயலகம்

ஈஸ்டரை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்து செய்தி

Posted On: 03 APR 2021 7:45PM by PIB Chennai

ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

"ஈஸ்டர் புனித திருநாளில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு, என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

"இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் இந்த பண்டிகை உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மனிதநேயம், மன்னித்தல், தியாகம், கருணை மற்றும் உண்மையின் அடையாளமாக இயேசு கிறிஸ்து விளங்கினார். அவரது வாழ்க்கை நமக்கு அமைதி, அன்பு மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அன்பு, நேசம் மற்றும் நல்லிணக்கத்தை நமது சமுதாயத்தில் வலுப்படுத்தும் இத்தகைய மாண்புகளை நாம் பின்பற்றி நாட்டின் மகிழ்ச்சி மற்றும் வளத்தை அதிகப்படுத்துவோம்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவரின் வாழ்த்து செய்தியை இந்தியில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Click here to see President's Message in Hindi

*****************



(Release ID: 1709384) Visitor Counter : 148