வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பகுதியில் சுற்றுலாத்துறை மேம்பாடு: மக்களவையில் டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்
Posted On:
10 FEB 2021 4:21PM by PIB Chennai
மக்களவையில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
2020-21 ஆம் நிதியாண்டில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த அசாம் மாநில அரசிடமிருந்து ரூ.132.43 கோடி மதிப்பிலான 6 திட்டங்களை வட கிழக்கு கவுன்சில் பெற்றுள்ளது.
* வடகிழக்கு பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த, கடந்த 5 ஆண்டுகளில் உள் கட்டமைப்பு திட்டங்கள், மின் இணைப்பு, குடிநீர் விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.769.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களுக்கு பல திட்டங்களின் கீழ் ரூ.195.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* 8 வட கிழக்கு மாநிலங்களுக்கு சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை அமைச்சகம் ரூ.980.15 கோடி வழங்கியுள்ளது.
* பிரசாத் திட்டத்தின் கீழ் அசாம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவுக்கு ரூ.38.63 கோடி வழங்கப்பட்டது.
* கண்காட்சி மற்றும் திருவிழாக்கள் , உள்நாட்டு வளர்ச்சி, விளம்பரம் மற்றும் விருந்தோம்பல் திட்டத்தின் கீழ் 8 வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.1221.22 கோடி வழங்கப்பட்டது.
* கொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட வடகிழக்கு மாநிலங்களுக்கு போதிய நிதி வழங்கப்பட்டது. கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ரூ.111.34 கோடி வழங்கியது. கொவிட்-19 மேலாண்மைக்கு, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.72.53 கோடி வழங்கப்பட்டது.
* 2020-21ம் நிதியாண்டில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.265.96 கோடி வழங்கப்பட்டது. கொவிட் அவசர நிதியுதவின் கீழ் அசாம் மாநிலத்துக்கு ரூ.180.04 கோடி வழங்கப்பட்டது.
-------
(Release ID: 1696882)
Visitor Counter : 95