சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மாசு பிரச்னைக்கு தீர்வு காண, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியை நாடுகிறது தில்லி காற்று தர ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JAN 2021 2:47PM by PIB Chennai

தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) உள்ள காற்று தர ஆணையம், மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இணையதள வசதியுடன், முடிவை தெரிவிக்கும் கருவி (டிஎஸ்எஸ்) ஒன்றை உருவாக்க  விரும்புகிறது.  இந்த உபகரணம், பல இடங்களில் இருந்து மாசு குறித்த அம்சங்களை சேகரித்து, அதற்கான சிறந்த தீர்வுகள் அல்லது முடிவுகளை தெரிவிக்கும் அளவிற்கு, இந்த டிஎஸ்எஸ் கருவி இருக்கும்.

 இந்த டிஎஸ்எஸ் கருவியை தயாரிப்பதற்கான பொறுப்பை, நாட்டில் உள்ள  பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் நிபுணர் குழுவிடம் காற்று தர ஆணையம் ஒப்படைத்துள்ளது.

 மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691200

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1691340) வருகையாளர் எண்ணிக்கை : 243
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Punjabi