நிதி அமைச்சகம்

வருமான வரித்துறை ஹைதராபாத்தில் சோதனை நடத்தியது

Posted On: 12 JAN 2021 7:49PM by PIB Chennai

போலியான துணை ஒப்பந்ததாரர்கள், போலி நிறுவனங்கள் மற்றும் போலி ரசீதுகள் ஆகியவற்றின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்தப் புகார்களின் மீது செய்யப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக,  2021 ஜனவரி 7 அன்று தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டது.

தெலங்கானாவில் உள்ள ஒரு முன்னணி சிவில் ஒப்பந்ததாரர் தொடர்புடைய இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள 19 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலி ரசீதுகளின் மூலம் பெரிய அளவில் பணத்தை கையாளும் தனிநபர்கள் மீதும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

**********************



(Release ID: 1688075) Visitor Counter : 111