குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புத்தாண்டு 2021-ஐ முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
31 DEC 2020 2:58PM by PIB Chennai
நாளை, புத்தாண்டு 2021 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
“நாம் புதிய ஆண்டு 2021-க்குள் அடியெடுத்து வைப்பதால், நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு என்பது நாம் அனைவரும் எதிர்நோக்கும் ஒரு நிகழ்வு. இது நம்பிக்கை, மற்றும் நட்பு ஆகியவற்றின் உணர்வை வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம்.
மிக மோசமான தொற்று நோய் மூலம், நமக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஆண்டை நாம் வழியனுப்பி வைப்பதால், நம்பிக்கை உணர்வுடன் புத்தாண்டை நாம் வரவேற்போம்.
உறுதி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் மீ்ள்சக்தி ஆகியவற்றைக் கொண்டு சவால்களைச் சமாளிப்போம் என நம்புவோம். கடந்த ஆண்டை விட, 2021 மிகவும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான பூமியை உருவாக்கட்டும்.
இந்தத் தொற்றைப் போராடித் தோற்கடிப்போம் என்ற புதிய உறுதி மற்றும் நம்பிக்கையுடன் இந்தப் புத்தாண்டுக்குள் நாம் நுழைவோம். தடுப்பூசி விரைவில் எந்த நேரத்திலும் கிடைக்க வாய்ப்புள்ளதால், 2021ஆம் ஆண்டை உற்சாகத்துடனும், நேர்மறையுடனும் வரவேற்போம்.
வேத தீர்க்கதரிசிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பிரார்த்தித்தது போல், வரும் ஆண்டில் நாம் நல்ல செய்திகளைக் கேட்போம், இனிமையான விஷயங்களைப் பார்ப்போம், அர்த்தமுள்ளதாகவும் அமைதியாகவும் வாழ்க்கையைச் செலவிடுவோம் என்று நம்புவோம்’’.
**********************
(Release ID: 1685159)
Visitor Counter : 194