புவி அறிவியல் அமைச்சகம்

கடல் தரவு மேலாண்மைக்கான மின்னணு தளத்தை டாக்டர். ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 29 DEC 2020 5:53PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS), மின்னணு கடல் தகவல் சேவை என்னும் கடல் தரவு மேலாண்மைக்கான மின்னணு தளத்தை முதன் முறையாக உருவாக்கியுள்ளது.

மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் இதைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மின்னணு இந்தியாவை நோக்கிய ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் டிஜிட்டல் ஓசன் என்றும், இது நீலப் பொருளாதாரத்தை விரிவாக்கி தற்சார்பு இந்தியாவுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் கூறினார்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம். ராஜீவன், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர். விபின் சந்திரா, கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மைய இயக்குநர் டாக்டர். டி. சீனிவாச குமார் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் மூத்த அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684418

-----


(रिलीज़ आईडी: 1684495) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu