குடியரசுத் தலைவர் செயலகம்

டையுவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 26 DEC 2020 3:34PM by PIB Chennai

டையுவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று (2020 டிசம்பர் 26) தொடங்கி வைத்தார்.

டி வடோதரா சர்வதேச வளாகம் டையு: மற்றும் கமலேஷ்வர் பள்ளி, கோக்லா ஆகியவற்றை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

சவுத்வாடியில் ஒரு பள்ளி கட்டிடம், டையு நகர சுவர்ப் பகுதியில் 1.3 கிலோ மீட்டர் நீளத்திற்கான பாரம்பரிய நடைபாதை உள்ளிட்டத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான முயற்சிகளை எடுக்கும் மக்களை பாராட்டினார்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், டிசம்பர் 25 முதல் 28 வரை டையுவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 28 அன்று குடியரசுத் தலைவர் புது தில்லிக்குத் திரும்புகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683794

------



(Release ID: 1683852) Visitor Counter : 200