நிதி அமைச்சகம்

புனேவில் வருமானவரித்துறை சோதனை

Posted On: 15 DEC 2020 3:58PM by PIB Chennai

வருமானத்தை மறைத்த காரணத்துக்காக, புனே பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான 29 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.   இதில் பல கோடி ரூபாய்  மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

புனேவில் பல ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் போலி வருமான கணக்குகளை காட்டியுள்ளன. இது தொடர்பாக பன்வல் மற்றும் வாஷி பகுதியில் வருமானவரித்துறையினர் 29 இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் ரியல் எஸ்டேட் குழுமம் ஒன்று கணக்கில் காட்டப்படாத வருமானத்தை, போலி நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்ட முறையற்ற கடன்களின் வட்டியை செலுத்தியதாக  கணக்கு காட்டியுள்ளது கண்டறியப்பட்டது. ரூ.58 கோடி கடன் வட்டிய செலுத்தியதாக இந்த குழுமம் கணக்கு காட்டியுள்ளது. முறைகேடான துணை ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10 கோடி செலவு செய்துள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடன் வட்டி செலுத்தியதாக கணக்கு காட்டப்பட்ட பணம் எல்லாம்  நிலம் வாங்க முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது கண்டறிப்பட்டது.

இதுபோன்ற பல மோசடிகள் குறித்து வருமானவரித்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680775



(Release ID: 1680907) Visitor Counter : 97