பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படையின் 98-வது ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு விழா

Posted On: 05 DEC 2020 7:25PM by PIB Chennai

கடற்படையின் 98-வது ஒருங்கிணைந்த அலுவலர் பயிற்சியின் நிறைவு விழா, கொவிட்-19 காரணமாக எளிமையான, ஆனால் அதே சமயம், ஊக்கமளிக்கும் வகையில், இன்று (2020 டிசம்பர் 5) நடந்தது.

தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி (பயிற்சி), ரியர் அட்மிரல் அந்தோனி ஜார்ஜ், கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

114 கடற்படையினர், 13 கடலோர காவல் படையினர், 5 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் (மியன்மாரில் இருந்து இருவர், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் தான்சானியவில் இருந்து தலா ஒருவர்) கப்பல்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

இந்த 24 வார பயிற்சி 2020 ஜூன் 29 அன்று தொடங்கியது. பல்வேறு பணிகள், கடமைகள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து இளம் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது பல்வேறு துறைமுகங்களுக்கும் இவர்கள் சென்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678612

**********************



(Release ID: 1678638) Visitor Counter : 219