எஃகுத்துறை அமைச்சகம்

கச்சா எஃகு உற்பத்தியில் 7 சதவீதத்தை எட்டியது செயில் நிறுவனம்

Posted On: 04 DEC 2020 5:34PM by PIB Chennai

செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் கச்சா எஃகு உற்பத்தியில் கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தியை (1.328 மில்லியன் டன்) விட 7 சதவிகித வளர்ச்சியை (1.417  மில்லியன் டன்) எட்டியுள்ளது.

செயில் நிறுவனத்தின் 5 ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளின் உற்பத்தி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 1.402 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1.303 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டது.

            நடப்பு நிதி ஆண்டின் துவக்கத்தில் கொவிட்-19-இன் தாக்கத்தால் எஃகின் தேவை கணிசமான அளவு குறைந்திருந்தாலும், ஏப்ரல்-நவம்பரில் மொத்த விற்பனை 2.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்த வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த செயில் நிறுவனத் தலைவர் திரு அனில் குமார் சவுத்ரி, கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட உற்பத்தி அளவினை எட்டுவதற்கு செயில் நிறுவனம் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டிருப்பதாகக் கூறினார். உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க செயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678327

----



(Release ID: 1678424) Visitor Counter : 112